ஆப்பிரிக்கவின் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் கிறிஸ்மஸ் நேரத்தில் கூட்டமாக இருந்த உணவகம் ஒன்றில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பெனி நகரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. உணவகத்தின் நுழைவாயிலில் தற்கொலை குண்டுதாரியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர் என்றும், அப்போது அவர் குண்டின் விசையை இயக்கி வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 6 பேர் இறந்தனர் என்றும், 13 பேர் காயமடைந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நடந்த இந்த தாக்குதலை அலைட் டெமாக்ரடிக் ஃபோர்சஸ் என்ற அமைப்பு நடத்தியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த அமைப்பு 'இஸ்லாமிய அரசு' என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவோடு தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment