நெதர்லாந்தில் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிய தம்பதியினர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

நெதர்லாந்தில் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிய தம்பதியினர் கைது

கொவிட்-19 தனிமைப்படுத்தல் ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்ற தம்பதியினரை நெதர்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஸ்கிபோல் விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினை நோக்கி புறப்படவிருந்த விமானம் ஒன்றில் இருந்து இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஸ்பெயின் ஆடவர் மற்றும் போர்த்துக்கல் பெண் நாட்டின் சுகாதார சேவையினரிடம் கையளிக்கப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தை வந்தடைந்த 13 பேருக்கு புதிய கொரோனா திரிபு இருப்பது உறுதியான நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 61 பேரிலேயே இந்த 19 பேரும் இருந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் இந்தக் தம்பதி இந்தக் குழுவில் இருந்தவர்களா என்பது உறுதி செய்யப்படவில்லை.

தென்னாபிரிக்காவில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வடமேற்கு கெனமலான்ட் பிராந்தியத்தில் இருக்கும் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டலில் இருந்தே இவர்கள் தப்பிச் சென்றிருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment