கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவரை சந்தித்த ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை குழு ! - News View

About Us

About Us

Breaking

Monday, November 15, 2021

கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவரை சந்தித்த ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை குழு !

நூருல் ஹுதா உமர்

கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீன் மற்றும் ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை குழுவினருக்கிடையிலான சந்திப்பு இன்று (15) கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதராலயத்தில் இடம்பெற்றது.

ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் பணிப்பளார் ஜெ.எம்.பாஸித் மற்றும் ஓவியக் கலைஞர் நஸார் சர்பான் ஆகியோர் கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீனை சந்தித்து கட்டார் நாட்டில் ஓவியக் கலையில் தனது திறமையை வெளிக்காட்டி வரும் இலங்கையைச் சேர்ந்த நஸார் சர்பான் வரைந்த ஓவியங்களை காண்பித்தனர்.

இதனை பார்வையிட்ட தூதுவர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இதன்போது தெரிவித்திருத்தார். 

இந்நிகழ்வில் தூதரக சிரேஷ்ட அதிகாரி ரஷீத் எம். பியாஸ் (நளீமி) யும் கலந்து கொண்டிருந்தார். தற்போது கத்தாரா அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஓவியக்கண்காட்சியில் நஸார் சர்பான் வரைந்த ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment