9000 மெகாவோட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் பெறுவதற்கு திட்டம் : இதுவரை 600 முதலீட்டாளர்கள் விண்ணப்பம் என்கிறார் இராஜாங்க அமைச்சர் துமிந்த - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

9000 மெகாவோட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் பெறுவதற்கு திட்டம் : இதுவரை 600 முதலீட்டாளர்கள் விண்ணப்பம் என்கிறார் இராஜாங்க அமைச்சர் துமிந்த

9000 மெகாவோட் மின்சாரத்தை மீள் புத்தாக்க மின்சார உற்பத்தி திட்டம் மூலம் பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் அதற்காக 600 முதலீட்டாளர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

பல்வேறு சர்வதேச நாடுகள் மின்சாரத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக தெரிவித்த அவர், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் அது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மின்சக்தி அமைச்சு மற்றும் வலுசக்தி அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மின்சாரத் துறையின் முன்னேற்றத்தை கவனத்திற் கொண்டு அது தொடர்பான அனைத்து சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களும் காலத்திற்குப் பொருத்தமான வகையில் மாற்றப்பட வேண்டும்.

தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் உள்ள தவறுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மேற்படி சட்டத்தில் உள்ள தவறுகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் தற்போது அரசாங்கம் அதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும்போது எதிர்க்கட்சியினர் அதற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment