ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ள நாடுகளில் நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
‘ஒமிக்ரோன்’ புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த நாடுகளில் நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இதுவரை நோய் பரவியுள்ள 17 நாடுகள் விவரம் வருமாறு
1. தென் ஆப்பிரிக்கா
2. ஹொங்கொங்
3. போட்ஸ்வானா
4. ஆஸ்திரேலியா
5. இத்தாலி
6. ஜெர்மனி
7. நெதர்லாந்து
8. பிரித்தானியா
9. இஸ்ரேல்
10. பெல்ஜியம்
11. சுவிட்சர்லாந்து
12. கனடா
13. பிரான்ஸ்
14. ஸ்பெயின்
15. போர்ச்சுக்கல்
16. டென்மார்க்
17. செக் குடியரசு
புதிய வகை கொரோனா மாறுபாடு தென்னாபிரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் கண்டறியப்பட்டது.
இது அதிக தொற்று அபாயத்தைக் கொண்டிருப்பதாக ஆரம்ப சான்றுகள் தெரிவிக்கின்றன. தென்னாபிரிக்கா புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக உடனடியாக அறிக்கை செய்ததற்காக பாராட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவை தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடையை விதித்தன.
இந்த முடிவை தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ராமபோசா விமர்சித்தார். அண்டை நாடுகள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பான் தமது எல்லைகளை இன்று முதல் மூடவுள்ளதாக அறிவித்துள்ளது, அதே நேரத்தில் அவுஸ்திரேலியா எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.
விசா வைத்திருக்கும் சர்வதேச மாணவர்கள் மற்றும் திறமையான பணியாளர்களுக்கான அவுஸ்திரேலியாவுக்கான பயணம் புதன்கிழமை மீண்டும் தொடங்கப்பட இருந்தது, ஆனால் தற்போது டிசம்பர் 15 வரை தாமதமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய இஸ்ரேலும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment