தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
தென் மாகாணம் முழுவதும் மற்றும் பன்னிபிட்டிய, தெஹிவளை, இரத்மலானை, ஹொரணை, மத்துகம, அம்பலாங்கொடை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
பல்வேறு உப மின் மின் விநியோகக் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்நிலை உருவாகியுள்ளதாகவும், அதனை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment