சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால் உணவுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (12) முதல் சோற்று பார்சல், கொத்து பார்சல், பால் தேநீர், பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை ரூ. 10 இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
தேநீரின் விலையை ரூபா 25ஆக தொடர்வதற்கு முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சமையல் எரிவாயுவின் விலை மிகப் பாரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், சோற்று பார்சல் ஒன்றின் விலையை குறைந்தபட்சம் ரூ. 30 இனால் அதிகரிக்க வேண்டியுள்ள நிலை காணப்படுவதாகவும், ஆயினும் தற்போதுள்ள மக்கள் உள்ள நிலையைக் கருத்திற் கொண்டு ரூ. 10 இனால் மாத்திரம் அதனை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கட்டுப்பாட்டு விலைகள் நீக்கத்தை தொடர்ந்து, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 10 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (ரூ. 130 - 170 வரை விற்பனை)
எனவே, பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் இவ்வாறு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment