பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் கொள்ளை இடம்பெறுகிறது - சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 20, 2021

பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் கொள்ளை இடம்பெறுகிறது - சுமந்திரன்

வடமராட்சி கிழக்கில் பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.

இன்றையதினம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக சட்டவிரோதமான மணல் கொள்ளை இந்த பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக நான் ஒரு முறை எனது வாகனத்தில் வரும் போது கடத்தல்காரர்கள் என்னை கண்டதும் தமது வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதை நான் நேரடியாக கண்டேன்.

அதேபோல் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளார்கள். அதாவது சட்டவிரோத மணல் அகழ்வு தனியார் காணிகளில் இடம்பெற்று வருகின்றது.

சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்பில் பொலிசாரிடம் தகவல் வழங்கும் போது, அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள் ஆனால் அவ்வாறு முறையிடும்போது மணல் கடத்தல்காரர்களிடமிருந்து பொலிசாரிடம் முடித்தவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது.

அவ்வாறு தான் தற்போதைய நிலை காணப்படுகின்றது. எனவே பொலிசாருடன் இணைந்து இந்த சட்டவிரோத மணல் கொள்ளை ஈடுபடுவது என்பது நிரூபனமாகின்றது. எனவே இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment