மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த ஆர்பிஜி லோஞ்சர் ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) மாலை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.
குறித்த வயலை சம்பவதினமான நேற்று மாலை உழவு இயந்திரம் மூலம் வயல் உரிமையாளர் உழவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆர்பிஜி லோஞ்சர் ஒன்று நிலத்தில் இருந்து வெளியே வந்துள்ளது
இதனையடுத்து இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று ஆர்பிஜி லோஞ்சரை மீட்டுட்டதாக தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த காலங்களில் இந்தப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேசரி
No comments:
Post a Comment