அல்லாஹ்வையே அவதூறாகப் பேசியவரின் தலைமையில் செயலணி நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா - News View

About Us

About Us

Breaking

Saturday, October 30, 2021

அல்லாஹ்வையே அவதூறாகப் பேசியவரின் தலைமையில் செயலணி நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா

“அல்­லாஹ்­வையே அவ­தூ­றாகப் பேசி­ய­வரின் தலை­மையில் செய­லணி நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்­யத்துல் உலமா சபை ஒன்று கூடி கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது என அகில இலங்கை ஜம்இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து இது ­தொ­டர்பில் விளக்­க­ம­ளிக்­கையில் செய­ல­ணியின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ராக அகில இலங்கை ஜம்இய்­யத்துல் உலமா சபையின் காலி கிளையின் தலைவர் மெல­ளவி எம்.இஸட்.மொஹமட் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 

இவர் அகில இலங்கை ஜம்இய்­யத்துல் உலமா சபை சிபா­ரிசின் கீழ் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. அவ­ரது பத­விக்­ காலம் கால­வ­தி­யா­கி­யுள்­ளது. கொவிட் நிலைமை கார­ண­மாக காலி கிளைக்கு புதிய நிர்­வா­கி­களை தெரிவு செய்ய முடி­யா­துள்­ளது.

நிலைமை சீராகி புதிய நிர்­வாக சபை நிய­மிக்­கப்­படும் வரை அவர் தற்­கா­லி­க­மாக தலைமை பதவி வகிப்பார்.

ஜனா­தி­பதி தனக்குள்ள அதி­கா­ரத்தின் கீழேயே இச் செய­ல­ணியை நிய­மித்­துள்ளார். என்­றாலும் முஸ்லிம் சமூகமும் நடு­நிலை வகிக்கும் ஏனைய சமூ­கத்­தி­னரும் வியப்­­புக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றார்கள் என்றார்.

இதே­வேளை ஜனா­தி­பதி செய­ல­ணியின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான உலமா சபையின் காலி கிளையின் தலைவர் மெள­லவி எம்.இஸட்,மொஹ­மட்டை தொடர்பு கொண்டபோது ,

இது தொடர்பில் அவர் கருத்து தெரி­விக்­கையில் “ஒரே நாடு ஒரே சட்டம்’’ தொடர்­பி­லான எமது சிபா­ரி­சுகள் பல கலந்­து­ரை­யா­டல்­களின் பின்பே தீர்­மா­னிக்­கப்­படும். 13 பேர் அடங்­கிய செய­ல­ணியில் முஸ்லிம் சமூகம் சார்பில் நால்வர் அங்கம் பெற்­றுள்ளோம். எமது சமூ­கத்­துக்கு பாதிப்­பில்­லாமல் சிபா­ரி­சுகள் முன்­வைக்­கப்­படும்.

நாம் விரைவில் ஜனா­தி­ப­தியைச் சந்தித்துப் பேசுவோம். அடுத்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்பு சட்ட வரைபை நாம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment