இந்திய கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்கள் இலங்கை வந்தடைந்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, October 24, 2021

இந்திய கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்கள் இலங்கை வந்தடைந்தன

(எம்.மனோசித்ரா)

இந்திய கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. இந்தியாவின் முதல் பயிற்சி படையணியின் 6 கப்பல்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இலங்கையை வந்தடைந்தன.

இளம் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் வினைத்திறனை மேலும் விரிவாக்கும் இலக்குடன் முதல் பயிற்சி படையணியின் குறித்த 6 இந்திய கப்பல்களும் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்த கப்பல்களின் விஜயமானது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நெருங்கிய நட்புறவு மற்றும் தோழமையை வெளிக்காட்டும் மற்றொரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வருகை தந்துள்ள கப்பல்களில் ஐ.என்.எஸ்.மகர் ரூ ஷர்துல் ஆகிய கப்பல்கள் கொழும்பிற்கும் ஐ.என்.எஸ்.சுஜாதா, தரங்கனி, சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகியவை திருகோணமலைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment