கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளையதினம் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான 12 மணி நேரப் பகுதியிலேயே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
களனி - முதுங்கொட புதிய கண்டி வீதியில் குழாய் திருத்தம் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
சியம்பலாபேவத்த, பியகம, தெல்கொட, உடுபில - அனுருமுல்ல, கேரகல, தெமலகம, கதுபொட, தெனடன, பெலஹெல, இந்தொலமுல்ல, தொம்போ, நாரங்வல, வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment