கொவிட் தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகளை எதிர்வரும் நவம்பர் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 31ஆம் திகதி மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை நீக்கத்தை தொடர்ந்து குறித்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகள் கடந்த திங்கட்கிழமை ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் ஆரம்பமானது. இதன்போது 133 புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவையானது, புகையிரத பருவச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment