நாளை முதல் வெளிநாட்டு வீரர்களின் பதிவு ஆரம்பம் - LPL இரண்டாவது பருவம் டிசம்பர் 04 - 23 வரை இடம்பெறும் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

நாளை முதல் வெளிநாட்டு வீரர்களின் பதிவு ஆரம்பம் - LPL இரண்டாவது பருவம் டிசம்பர் 04 - 23 வரை இடம்பெறும்

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் இரண்டாவது தொடரை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை LPL தொடரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தொடரில் 5 அணிகள் விளையாடுவதோடு, ஒவ்வொரு அணியும் 14 உள்நாட்டு வீரர்களையும் 6 வெளிநாட்டு வீரர்களையும் கொண்டுள்ளது.

இதேவேளை, இவ்வருடம் இடம்பெறும் LPL கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை (24) முதல் ஆரம்பிக்கப்பவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் வீரர்கள், பின்னர் உரிய அணிகளில் இணைவதற்கான வாய்ப்பை பெறுவர்.

இதற்காக உரிய நாட்டின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அனுமதியை அந்தந்த வீரர்கள் பெற்றிருப்பது அவசியமாகுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஆரம்பமான LPL கிரிக்கெட் தொடரின் கன்னி கிண்ணத்தை ஜப்னா ஸ்டேல்லியன்ஸ் அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment