அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும் போது உரிய தருணத்தில் அறிவிக்கப்படும் - அமைச்சர் ரமேஷ் பத்திரண - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும் போது உரிய தருணத்தில் அறிவிக்கப்படும் - அமைச்சர் ரமேஷ் பத்திரண

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பில் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும் போது உரிய தருணத்தில் அறிவிக்கப்படும். இம்மாத இறுதியில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளைப் போலவே நாட்டு மக்களின் பொருளாதாரம் குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்துகிறது.

எனவேதான் பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைப்பதற்கும் சில வியாபாரங்களை முன்னெடுப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. அதே போன்று வெற்றிகரமான தடுப்பூசி வழங்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment