இராஜதுரை ஹஷான்
புகையிரதம், அரச மற்றும் தனியார் பேருந்துகளை தவிர்த்து ஏனைய வாகனங்கள் அனைத்தும் போக்கு வரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. பொதுப் போக்கு வரத்து சேவையின் ஊடாக மாத்திரமா கொவிட் தொற்று பரவலடைகிறது. தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடின் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பிடப்படுகிறது, ஆனால் வீதிகளில் வாகனங்கள் சாதாரண நாட்களில் செல்வதை போலவே செல்கின்றன. மக்களும் நடமாடுகிறார்கள்.
புகையிரதம், அரச மற்றும் தனியார் பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபடவில்லை. கொவிட்-19 வைரஸ் பொதுப் போக்கு வரத்து சேவையின் ஊடாக மாத்திரமா பரவுகிறது.
கொவிட் தாக்கத்தினை கருத்திற் கொண்டு நாடு முடக்கப்படும் ஒவ்வொரு வேளையும் தனியார் பேருந்து உரிமையாளர்களும், ஏனைய சேவையாளர்களும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment