எம்.ஆர்.எம்.வசீம்
நாடு பூராகவும் அனைத்து வைத்தியசாலைகளிலும் கொவிட் நோயாளர்களுக்கு தேவையான ஒட்சிசன் விநியாேகம் தொடர்பில் நாளாந்தம் கண்காணிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு பூராகவும் கொராேனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒட்சிசன்களை விநியோகிப்பது தொடர்பில் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கி இருக்கின்றார்.
அதன் பிரகாரம் கொவிட் நோயாளர்களுக்கு தேவையான ஒட்சிசன் விநியாேகம் தொடர்பில் நாளாந்தம் கண்காணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் ஒட்சிசன் தேவைப்படுகின்ற அனைத்து நோயாளர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாமல் ஒட்சிசனை பெற்றுக் கொடுப்பதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அதற்காக மிகவும் பொருத்தமான நடவடிக்கையை சுகாதார மற்றும் தொழிநுற்ப முறைமை ஊடாக பெற்றுக் கொள்ளுமாறும் அமைச்சர் குறித்த அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கி இருக்கின்றார்.
No comments:
Post a Comment