எம்.மனோசித்ரா
வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களுக்கு அடுத்த ஆண்டு முதல் வரி அறவிடுவதற்கும் , ஏனைய வரிகளை அதிகரிப்பதற்கும் தம்புளை நகர சபை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய 2022 முதல் தம்புளை நகர சபைக்கு உட்பட்ட 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வரி அறவிடப்படவுள்ளதோடு, எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி முதல் வரி செலுத்துதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.
தம்புளை மாநகர சபை கூட்டம் இன்று நடைபெற்ற போது நகர சபைத் தலைவரால் நகர சபை உறுப்பினர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர சபைத் தலைவர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஏனைய வரிகளும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment