நா.தனுஜா
நாட்டு மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வேளையில் அரசாங்கம் அவர்களின் சுதந்திரத்தைப் பறித்துக் கொள்கின்றது. செயற்திறனான உணவுப் பொருள் விநியோகத்தில் அரசாங்கம் தோல்வி கண்டதை அடுத்து நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு சீனி வரி அறவீட்டு மோசடி தொடர்பான விசாரணைகள் கடந்த மார்ச் மாதம் கணக்காய்வாளர் நாயகத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவ்விசாரணை அறிக்கை இன்னமும் ஏன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை? என்றும் அவ்வறிக்கை காணாமல் போய்விட்டதா? அல்லது மறைக்கப்பட்டு விட்டதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் அவர்களின் சுதந்திரத்தை மேலும் பறித்துக் கொள்கின்றது.
தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை செயற்திறனான வகையில் பகிர்ந்தளிப்பதில் தோல்வியடையும் வேளையில், அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.
அதேவேளை சீனி நெருக்கடி தொடர்பிலும் பதிவொன்றைச் செய்திருக்கும் அவர், 'சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ கிராம் சீனியின் சந்தை விலை 85 ரூபாவாகக் காணப்பட்டதுடன் இவ்வருடத்திற்குப் போதுமானளவு சீனி கையிருப்பில் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நேற்றுமுன்தினம் சீனியின் சந்தை விலை 40 ரூபாவினால் அதிகரித்திருக்கின்றது.
No comments:
Post a Comment