எம்.மனோசித்ரா
இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமாயின், தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவிற்கான விலையையும் அதிகரிக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் சந்தையில் ஏற்படுகின்ற போட்டித் தன்மையில் தேசிய பால் உற்பத்தியாளர்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்படும் என்று மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பால்மா விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், பால் மற்றும் பால்மா உற்பத்திக்கான ஏனைய சேர்க்கை பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பால்மாவின் விலையை அதிகரிக்காமல் எம்மால் பேணக் கூடியதாக இருந்தது. விலை அதிகரிப்பது தொடர்பில் நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவும் இல்லை.
ஆனால் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவிற்கான விலையை அதிகரிக்காமல் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை மாத்திரம் அதிகரிக்க அனுமதி வழங்கப்படுமாயின் அது பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும். இதன் ஊடாக தேசிய பால் உற்பத்தி தொழிற்துறையும் பாதிக்கப்படக் கூடும்.
எனவே இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமாயின், தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவிற்கான விலையையும் அதிகரிக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் சந்தையில் ஏற்படுகின்ற போட்டி தன்மையில் தேசிய பால் உற்பத்தியாளர்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்படும் என்றார்.
No comments:
Post a Comment