மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலை : நீரேந்தும் பிரதேசங்களுக்கு அருகில் வசிப்போருக்கு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, September 3, 2021

மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலை : நீரேந்தும் பிரதேசங்களுக்கு அருகில் வசிப்போருக்கு எச்சரிக்கை

மத்திய மலைநாட்டில் கடந்த தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மத்திய மலைநாட்டின் உயர்ந்த மலை பகுதிகளில் தொடர்ச்சியாக பனி மூட்டம் காணப்படுவதோடு குளிரான காலநிலையும் காணப்படுகின்றது.

இடைவிடாத மழை காரணமாக மேல் கொத்மலை, கெனியன், லக்ஸபான, நவலக்ஸப்பான, காசல்ரீ, விமலசுரேந்திரா, மவுசாக்கலை உள்ளிட்ட நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்தும் வருகின்றது.

நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் மழை காரணமாக நீர் வீழ்ச்சிகள், ஓடைகள் மற்றும் ஆறுகள் ஆகியவற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

இதனால் இப்பகுதிகளில் அண்டி வாழுகின்ற மக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தற்போது இப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் பெரும் அசௌகரியத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தொடர்ச்சியாக மழை பெய்வதன் காரணமாக மத்திய மலைநாட்டின் பிரதான பாதைகளில் பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.

மேலும் இப்பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்யுமாகவிருந்தால் மண்திட்டுக்கள் சரிந்து விழக்கூடிய நிலையும் காணப்படுகின்றது.

குறிப்பாக கொழும்பு - ஹற்றன் பிரதான பாதையின் கினிகத்தேனை, வட்டவளை, ரொசல்ல, நோட்டன் ஆகிய பாதைகளுக்கிடையிலான பகுதிகளில் அதிக பனிமூட்டம் நிலவுகின்றது இதனால் இப்பகுதியூடாக வாகனத்தை செலுத்துவோர் மிக அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

கினிகத்தேனை நிருபர்

No comments:

Post a Comment