சந்தையில் பொருட்களின் பற்றாக்குறை ஏற்படுவதற்கு ஒரு சிறிய வியாபாரிகள் குழு பொருட்களை மறைத்து செயற்கையான சூழ்நிலையை உருவாக்குகின்றனர். பற்றாக்குறை தொடர்பாக பரவும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.
நாடு ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து செல்கிறது. ஆனால் ஒரு அரசாங்கம் கோவிட் தொற்று நோயால் எழும் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள தயாராக உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், இலங்கை ஒரு சிறந்த ஜனநாயக கட்டமைப்பைக் கொண்டுள்ள நாடு என்றும் இந்த சூழலில் எதிர்க்கட்சிகள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
முக்கிய ஊடகங்களும் சமூக ஊடகங்களும் அரசாங்கத்தை விமர்சித்து அதன் செயல்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுத்து வருவதாக கூறினார்.
நம் நாட்டில் ஒரு பரந்த ஜனநாயக முறை உள்ளது. அதனை மறுப்பவர்களுக்கு பாராளுமன்றத்திற்கு வந்து எவ்வாறு அதன் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது என்று பார்க்க அழைக்கிறேன். எதிர்க்கட்சி அளவு சிறியதாக இருந்தாலும், அவர்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
அரசாங்க விவகாரங்களை விமர்சிக்கவும், ஒவ்வொரு அமர்வின் முடிவிலும், ஒரு அமைச்சர் அல்லது அரசாங்கத்திடமிருந்து இரண்டு நேரடி கேள்விகளைக் கேட்க அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அவர்கள் விவாதிக்கிறார்கள்.
முக்கிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அரசாங்கத்தை நேரடியாக விமர்சிக்க வாய்ப்பு உள்ளது. மிக முக்கியமாக நீதித்துறை செயல்பாடுகள் சுதந்திரமாக இடம்பெறுகின்றன என்றார்.
No comments:
Post a Comment