வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உடல் நிலையில் மாற்றம் உணரப்பட்டதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கோப்பாய் பொது சுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொண்டு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இச் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் குடும்பத்துடன் அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment