ஆப்கான் வான் வெளியில் டிரோன்கள் பறந்தால் விளைவுகள் மோசமாகும் : அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

ஆப்கான் வான் வெளியில் டிரோன்கள் பறந்தால் விளைவுகள் மோசமாகும் : அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுதல் ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாக தலிபான் அரசு குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய தொடங்கியதும் தலிபான்கள் அந்த நாட்டை ஆக்கிரமித்தனர். 

கடந்த மாதம் 15ம் திகதி ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் வசமானதை தொடர்ந்து, 30ம் திகதி அமெரிக்க படைகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறின.

முன்னதாக காபூல் விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா ‘டிரோன்’ (ஆளில்லா விமானம்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் அப்பாவி பொதுமக்கள் சிலரும் கொல்லப்பட்டனர். இதற்கு அமெரிக்க ராணுவம் மன்னிப்பு கோரியது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா ‘டிரோன்களை’ அனுப்பினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ‘‘ஆப்கானிஸ்தானின் வான் வெளி அமெரிக்க டிரோன்களால் ஆக்கிரமிக்கப்படுவதால் அனைத்து சர்வதேச உரிமைகள், சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் மீதான உறுதிபாட்டை அமெரிக்கா மீறுவதை சமீபத்தில் பார்த்தோம். 

இந்த மீறல்கள் சரி செய்யப்பட வேண்டும் மற்றும் தடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மோசமான எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment