ஊவா மாகாணத்தில் இதுவரை 408 கொரோனா மரணங்கள் : 35 ஆயிரத்து தொளாயிரத்து 997 தொற்றாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 7, 2021

ஊவா மாகாணத்தில் இதுவரை 408 கொரோனா மரணங்கள் : 35 ஆயிரத்து தொளாயிரத்து 997 தொற்றாளர்கள்

பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாணத்தில், கோவிட்19 தொற்றினால், சிகிச்சைகள் பலனின்றி ஆரம்பம் முதல் இதுவரையிலான 7.9.2021 காலப்பகுதியில் 408 பேர் உயிரிழந்துள்ளதாக ஊவா சுகாதார சேவை பணிப்பகத்தினர் விடுத்துள்ள கோவிட்19 தொற்று விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புக்களில் பதுளை மாவட்டத்தில் 304 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 104 பேருமாக மொத்த 408 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் வெலிமடை பிரதேச சுகாதாரப் பிரிவிலேயே 45 பேர் என்ற அதிக மரணங்களும், மொனராகலை மாவட்டத்தில் படல்கும்பரை பிரதேச சுகாதாரப் பிரிவிலேயே 19 என்ற அதிக மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

மேலும் பதுளை மாவட்டத்தில் பதுளை பிரதேச சுகாதாரப் பிரிவிலேயே 2969 என்ற வகையில் கோவிட் 19 தொற்றளர்களின் அதிகரிப்புக்கள் காணப்படுகின்றன. மொனராகலை மாவட்டத்தில், மொனராகலை சுகாதாரப் பரிவில் 2500 என்ற வகையில் கோவிட்19 தொற்றாளர்களில் அதிகரிப்புக்கள் காணப்படுகின்றன.

பதுளை மாவட்டம்
பதுளை - 2969 - தொற்றாளர்கள், உயிரிழப்புகள் - 43 பேர்
பண்டாரவளை - 1740 - தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் - 35 பேர்
எல்ல - 1079 - தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் - 07 பேர்
கிராந்துருகோட்டை - 1310 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் -16பேர்
ஹல்துமுள்ளை - 922 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 12பேர்
ஹாலி-எல - 1575 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 35 பேர்
ஹப்புத்தளை - 1391 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 22 பேர்
கந்தகெட்டிய - 620 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் -02 பேர்
லுணுகலை - 731 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 11 பேர்
மகியங்கனை - 1698 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 16 பேர்
மீகாகிவுல - 437 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 07 பேர்
பசறை -1329 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் -19 பேர்
ரிதிமாளியத்த - 1680 தொற்றாளர்கள் , உயிரிழப்புக்கள் - 07 பேர்
சொரணாதொட்டை – 407 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் -4 பேர்
ஊவா பரனகம - 1167 தொற்றாளர்கள் , உயிரிழப்புக்கள் 23 பேர்

வெலிமடை 1960 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் 45 பேர் என்ற வகையில், 304 மொத்த மரணங்களும், 21 ஆயிரத்து நூற்று பதினைந்து பேர் (21115) தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மொனராகலை மாவட்டம்
மொனராகலை -2500 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் 11 பேர்
சியாம்பலாண்டுவை -1455 – தொற்றளார்கள், உயிரிழப்புக்கள் -06 பேர்
மடுல்ல - 1115 தொற்றாளர்கள் ,உயிரிழப்புக்கள் -05பேர்
மெதகம - 1271 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் - 05 பேர்
பிபிலை - 1581 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் - 16 பேர்
படல்கும்பரை - 1096 தொற்றாளர்கள் , உயிரிழப்புக்கள்- 19 பேர்
புத்தலை - 1692 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் - 14 பேர்
வெள்ளவாயா - 1926 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 09 பேர்
தனமல்விலை - 427 தொற்றாளர்கள் உயிரிழப்புக்கள் - 02 பேர்
செலனகலை - 1124 தொற்றாளர்கள் , உயிரிழப்புக்கள் - 14 பேர்

கதிர்காமம் 695 தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் 03 பேர் என்ற வகையில், 104 மரணங்களும், 14 ஆயிரத்து எண்ணூற்றுஎன்பத்திரண்டு பேர் (14882) தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

இதனடிப்படையில், ஊவா மாகாணத்தில் 408 மரணங்களும், 35 ஆயிரத்து தொளாயிரத்து தொன்னூற்று ஏழு பேர் (35997) கோவிட் 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment