‛வாட்ஸ்ஆப்' நிறுவனத்திற்கு 225 மில்லியன் யூரோ அபராதம் விதித்த அயர்லாந்து - News View

About Us

About Us

Breaking

Friday, September 3, 2021

‛வாட்ஸ்ஆப்' நிறுவனத்திற்கு 225 மில்லியன் யூரோ அபராதம் விதித்த அயர்லாந்து

தகவல் பரிமாற்ற செயலிகளில் முன்னணியில் இருக்கும் ‛வாட்ஸ்ஆப்' நிறுவனத்தை கடந்த 2014 இல் பேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தியது. 

இந்நிலையில், ‛வாட்ஸ்ஆப்' செயலி தனது பயனர்களின் விவரங்களை பேஸ்புக் நிறுவனத்தின் பிற செயலிகளுடன் பகிர்ந்து கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டது. 

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு ‛வாட்ஸ்ஆப்' நிறுவனத்துக்கு 50 மில்லியன் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. 

எனினும் இந்த அபராதம் மிகவும் குறைவாக இருப்பதாக ஐரோப்பிய ஒழுங்குமுறையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அயர்லாந்து நாட்டின் தகவல் பாதுகாப்பு ஆணையம் இந்த அபராதத் தொகையை அதிகரித்துள்ளது.

பல காரணிகளின் அடிப்படையில் அதன் முன்மொழியப்பட்ட அபராதத்தை மறுபரிசீலனை செய்ய மற்றும் அதிகரிக்கும்படி அயர்லாந்திடம் கேட்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் 225 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படுவதாகவும் டி.பி.சி. தெரிவித்துள்ளது. 

இந்த அபராதம் மிகவும் அதிகமானது என்றும் இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாகவும் ‛வாட்ஸ்ஆப்' அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment