யாழ்ப்பாணத்தில் வீடுடைத்து 10 பவுண் தங்க நகைகளைத் திருடியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சுபாஷ் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (15) 10 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.
வீட்டிலுள்ள தாயும் மகளும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் வீடுடைத்து இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவில் அன்றைய தினமே முறைப்பாடு வழங்கப்பட்டது.
அது தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி முதன்மை பொலிஸ் பரிசோதகர் விதான பத்திரனவின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
குருநகரைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார்.
சந்தேக நபர் இன்று (17) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டில்றுக் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் குணசேகர, பொலிஸ் சாஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கபில்தாஸ், விஜயகாந்த், நவநீதன் மற்றும் கஜானன் ஆகியோரினால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment