தடுப்பூசி செயற்திட்டத்திற்கு WHO இலங்கைக்கு பாராட்டு : அவசர உதவிகளை வழங்கவும் உறுதி - News View

About Us

About Us

Breaking

Sunday, August 22, 2021

தடுப்பூசி செயற்திட்டத்திற்கு WHO இலங்கைக்கு பாராட்டு : அவசர உதவிகளை வழங்கவும் உறுதி

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் பாராட்டத்தக்கதென உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அலகா சிங் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிய சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல பதவியேற்றதன் பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி ஒருவரை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.

அவசர வைத்திய வசதிகளை நாட்டுக்கு வழங்குவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி ஓக்ஸிஜன் விநியோகித்தல் குறித்து கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment