கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் போக்கு வரத்து இராஜாங்க அமைச்சருமான U.L.M.பாருக் இன்று (06) காலை காலமானார்.
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 80 ஆவது வயதில் காலமானார்.
இலங்கை போக்கு வரத்து சபையின் தலைவராகவும் அவர் சிறிது காலம் செயற்பட்டிருந்தார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 4 மணிக்கு கன்னத்தோட்டையில் இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment