முறிகண்டிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் : அன்னதான மண்டபம் தொடர்பாகவும் ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 8, 2021

முறிகண்டிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் : அன்னதான மண்டபம் தொடர்பாகவும் ஆராய்வு

முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தில் அன்னதான மண்டபம் அமைப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கான விஜயத்தினை நேற்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஆலயத்திற்கான அன்னதான மண்டபத்தினை அமைப்பது தொடர்பாகவும் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யுத்தத்தின் காரணமாக உருக்குலைந்திரந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முருகண்டி ஆலயத்தின் புனிதத்தினை பேணிப் பாதுகாப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை சுட்டிக் காட்டினார்.

மேலும், அன்னதான மண்டபம் அமைப்பதற்கு காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக இந்து கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. உமாமகேஸ்வரன் மற்றும் பௌத்த சாசன மத விவகாரங்களுக்கான அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்கள் ஆகியோரினால் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வரலாற்றுப் பெருமை மிக்க ஆலயத்திற்கான அன்னதான மண்டபத்தினை அமைப்பதற்கு தனது ஒத்துழைப்புக் கிடைக்கும் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment