தடுப்பூசி பெற்றதற்கான அட்டையை நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் கைவசம் வைத்திருப்பது கட்டாயம் : தடுப்பூசி பெற்றுக் கொள்ளாது நிராகரிப்போரை அறியத்தரவும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 4, 2021

தடுப்பூசி பெற்றதற்கான அட்டையை நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் கைவசம் வைத்திருப்பது கட்டாயம் : தடுப்பூசி பெற்றுக் கொள்ளாது நிராகரிப்போரை அறியத்தரவும்

நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையை கைவசம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொள்வதை நிராகரிப்போர் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக எந்த ஒரு நபரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொண்ட அட்டையை தம்வசம் வைத்திருப்பது மிக முக்கியமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாது நிராகரிப்போர் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிசாருக்கு அறியத்தருமாறும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment