கொவிட்-19 தொற்று காரணமாக, இளம் தந்தையையும் தாயையும் இழந்த எதுவும் அறியா 5 வயது குழந்தை தொடர்பிலான செய்தியொன்று தற்போது நாடு முழுவதும் அனைவரினதும் கவனத்துக்குள்ளாகியுள்ளது.
கிரிபத்கொடையில் வசிக்கும் பிரபல ஆங்கில ஆசிரியரான தனஞ்சய அநுராத கொவிட்-19 தொற்றுக்கு இலக்காகி, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி அஞ்சலி பெரேரா தனது கணவர் இறந்த சோகத்தில் அவர் இறந்த மறுநாள் உயிரிழந்துள்ளார்.
அவர்கள் இருவரினதும் 6 ஆவது திருமணநாள் நேற்றையதினம் (25) ஆகும்.
இதனத் தொடர்ந்து, அவர்கள் இருவரினதும் ஒரே குழந்தையான 5 வயது மகள் தாயையும் தந்தையையும் இழந்து நிற்கின்ற சோகமான நிலை உருவாகியுள்ளது.
தனஞ்சய அநுராதவின் இறுதிக் கிரியைகள் பியகமவில் இடம்பெற்றதோடு, அவரது மனைவியின் இறுதிச் சடங்குகள் இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment