மட்டக்களப்பில் டெல்டா, அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் : ஒரேநாளில் கொரோனாவுக்கு 10 பேர் பலி - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 28, 2021

மட்டக்களப்பில் டெல்டா, அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் : ஒரேநாளில் கொரோனாவுக்கு 10 பேர் பலி - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் புதிதாக 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், செங்கலடி, வெல்லாவெளி, வாழைச்சேனை, வவுணதீவு, ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் 7 பேர் உட்பட 10 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் 211 பேராக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இருந்து எழுமாறாக எடுக்கப்பட்ட 3 பேரின் பிசிஆர் பரிசோதனையின் மாதிரிகள் கொழும்பு ஜெயவர்தன பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு டெல்டா வைரசும், ஒருவருக்கு அல்பா வைரசும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்டத்தில் டெல்டா வைரஸ் தொற்று பரவியிருக்கின்றதுடன் ஒரு வாரத்தில் 1982 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், நாளாந்தம் 300 தொற்றாளர்கள் கண்டறியப்படுவதுடன், 5 க்கு மேற்பட்டோர் மரணமடைந்து வருகின்றனர்.

ஆகவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் அப்போதுதான் தொற்றை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment