பாரிய அளவில் ஒன்றுகூடும் போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் முற்றாக தடை - மீறுவோர் தொடர்பில் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 6, 2021

பாரிய அளவில் ஒன்றுகூடும் போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் முற்றாக தடை - மீறுவோர் தொடர்பில் நடவடிக்கை

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பொது நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற செயற்பாடுகள், மீள அறிவிக்கப்படும் வரை மேற்கொள்ளக்கூடாது என, பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள DDG (PHS) 1/DO2/713/2017/20 எனும் கடிதத்தின் அடிப்படையில் பொலிஸ் மாஅதிபரினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பொது நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற செயற்பாடுகள் காரணமாக, கொவிட்-19 தொற்றும் பாரிய அபாயம் காணப்படுவதால் இவ்வாறு ஒன்றுகூடுவதை மேற்கொள்ளக் கூடாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

குறித்த தனிமைப்படுத்தல் உத்தரவு தொடர்பில் அதனை மீறுவோர் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment