பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கி வைக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கி வைக்கப்பட்டது

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை கிராமத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக நலிவுற்ற பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலின் வழிகாட்டலில் செம்மண்ணோடை கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு கிராம அதிகாரி அலுவலகத்தில் வைத்து உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

செம்மண்ணோடை கிராம அதிகாரி எம்.சாதாத் தலைமையில் உலர் உணவு வழங்கும் நிகழ்வில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எல்.எம்.புஹாரி, அபிவிருத்தி மையத்தின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment