நாட்டிற்கு மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை கொண்டு வருவதற்காக இரண்டு விமானங்கள் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமாக இரண்டு விமானங்களே இவ்வாறு சீனாவை சென்றடைந்துள்ளன.
குறித்த விமானங்கள் நாளை காலை 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டு இலங்கையை வந்தடையும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment