கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கல் ஆரம்பம் : மக்கள் உற்சாகத்துடன் பங்கெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, July 24, 2021

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கல் ஆரம்பம் : மக்கள் உற்சாகத்துடன் பங்கெடுப்பு

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது, காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி, நிந்தவூர், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் மணி இன்று காலை 8.00 மணியிலிருந்து இடம்பெற்று வருகின்றது. 

பிரதேச மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் 60 வயதுக்கு மேற்பட்டோர், கற்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார் என பலருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணி சிறப்பாக அந்தந்த பிரதேச காதார வைத்திய அதிகாரிகளின் தலைமையில் சுகாதார உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.

மேலும் அரச அதிகாரிகள், மக்களுடன் நேரடி தொடர்பை கொண்டிருப்போர், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் என பலருக்கும் பாடசாலைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட வள நிலையங்களில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் அவர்களும் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகிறார். மக்கள் உற்சாகத்துடன் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வருவதை காணக்கூடியதாக உள்ளது.

No comments:

Post a Comment