ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜயந்த கெட்டகொட செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவர் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
முன்னதாக ஜனாதிபதி முன்னிலையில் பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment