ஓட்டமாவடியில் ஜனாஸாக்களை அடக்க பணம் வசூலிக்கப்படுவதில்லை : பிரதேச சபை தவி­சாளர், செய­லாளர் விளக்கமளிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

ஓட்டமாவடியில் ஜனாஸாக்களை அடக்க பணம் வசூலிக்கப்படுவதில்லை : பிரதேச சபை தவி­சாளர், செய­லாளர் விளக்கமளிப்பு

கொரோனா தொற்­றினால் மர­ண­ம­டைந்த நபர்­களின் உடல்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக ஓட்­ட­மா­வடி - மஜ்மா நகர் பகு­திக்கு வருப­வர்­க­ளிடம் இர­க­சி­ய­மாக பணம் வசூ­லிப்­ப­தா­கவும், அவ்­வாறு சிலர் பணத்தைப் பெற்றுக் கொண்­டுள்­ள­தா­கவும் சமூக வலைத்தளங்­களில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வருகின்றன. 

இது தொடர்பில் தெளிவு வழங்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பு ஒன்று கடந்த 1 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பிர­தேச சபை மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது.

அங்கு ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை தவி­சாளர் ஏ.எம்.நௌபர், பிர­தேச சபை செய­லாளர் எஸ்.எம். சிஹாப்தீன் ஆகியோர் கருத்­து­களை வெளி­யிட்­டனர்.

ஏ.எம்.நெளபர் (தவி­சாளர்)
நாட்டின் பல பகு­தி­க­ளிலும் இருந்து வரு­கின்ற உடல்­களை நல்லடக்கம் செய்­கின்ற இட­மாக ஓட்­ட­மா­வடி - மஜ்மா நகர் பகுதி இன்றும் இருந்து வரு­கி­றது. எந்­த ­வி­த­மான பணமும் அறவிடப்படாமலே இந்தப் பணி­களை எமது ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை செய்து வரு­கி­றது.

இந்த விட­யத்தை களங்­கப்­ப­டுத்தும் வித­மாக ஒரு சில சக்­திகள் வெளி­யூர்­களில் இருந்து மர­ண­ம­டைந்த உடல்­க­ளுடன் வரு­கின்ற நபர்­களை தொடர்பு கொண்டு நிதி­களை கேட்டு வசூ­லிப்­ப­தாக சில தக­வல்கள் வெளி­யாகி இருக்­கின்­றன.

இது தொடர்­பாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எங்­க­ளது சபைக்கு முறைப்பா­டுகள் கிடைக்­காத கார­ணத்தால் எங்­களால் அவர்­க­ளுக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்க முடி­யா­துள்­ளது.

முக­நூல்­களில் இவ் விடயம் தொடர்­பாக எந்­த­வித ஆதா­ரங்கள் இல்லாமல் பேசு­கின்ற போது தேவை­யற்ற பிரச்­சி­னை­களும் முரண்பா­டு­களும் எழு­கின்­றது. அத்­துடன் அர்ப்­ப­ணிப்­போடு இந்தப் பணியை செய்து வரும் பிர­தேச சபைக்கும் களங்கம் ஏற்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.

முக­நூல்­களில் இவ்­வாறு பதி­விடும் நபர்கள் முறை­யாக எங்­க­ளிடம் நேர­டி­யாக வந்து அதற்­கான ஆதா­ரங்­களை சமர்ப்­பித்து அவ்வாறான­வர்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

எந்­த­வித நோக்­கமும், இலா­பமும் இல்­லாமல் இந்த நாட்டு மக்களுக்காக இவ்­வா­றான சேவை­யினை அர்ப்­ப­ணிப்­புடன் இந்தப் பிர­தேசம் செய்து கொண்­டி­ருக்கும் போது இந்தப் பணியை கொச்சைப்­ப­டுத்தி, களங்­கப்­ப­டுத்தி ஜனாஸா நல்­ல­டக்கப் பணியை இல்­லா­தொ­ழிக்கும் ஒரு சதி­யாக இது இருக்­குமோ எனும் அச்சம் எங்கள் மத்­தியில் எழுந்­துள்­ளது.

தனிப்­பட்ட கோப­தா­பங்கள் கார­ண­மாக அல்­லது தனிப்­பட்ட நோக்கம் கார­ண­மாக பொறுப்­பற்ற விதத்தில் நடந்தால் எமது சமூகம் மட்­டு­மல்ல இந்த நாட்டில் இருக்­கின்ற அனைத்து சமூ­கமும் பாதிக்­கப்­படும் என்­பதில் சந்­தே­க­மில்லை என்றார்.

எஸ்.எம். சிஹாப்தீன் (பிர­தேச சபை செய­லாளர்)
ஓட்­ட­மா­வடி பிர­தே­சத்­துக்கு கொண்டு வரப்­படும் ஜனா­ஸாக்­களை வைத்து இர­க­சி­ய­மாக நிதி வசூ­லிக்­கப்­ப­டு­வ­தாக வெளி­வந்­துள்ள தகவல்­களின் உண்மைத் தன்­மையை அறிந்து கொள்ள நாம் பொலிஸ்மா அதிபர், பிரதி பொலிஸ்மா அதிபர், குற்­றப் ­பு­ல­னாய்வுத் திணைக்­களம் மற்றும் கிழக்கு மாகாண கட்­ட­ளை­யிடும் தள­பதி ஆகி­யோர்­க­ளுக்கு முறைப்­பாடு செய்­துள்ளோம்.

ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிதி அற­விட பிர­தேச சபைக்கு அதி­கா­ரங்கள் இருந்தும் அதனை நாங்கள் நாட்டு நிலைமை மற்றும் மக்­களின் நலன் கருதி தவிர்த்­துள்ளோம்.

இவ்­வாறு நாங்கள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் நிலையில்தான் ஜனா­ஸாவை வைத்து ஓட்­ட­மா­வ­டியில் பணம் வசூ­லிப்­ப­தாக செய்திகள் கசிந்­துள்­ளன.

ஜனாஸா நல்­ல­டக்கம் செய்­கின்ற இடத்­துக்கு ஏரா­ள­மான தேவைப்பா­டுகள் இருந்தும் அதனை உள்ளூர், வெளியூர் வர்த்­தக சங்கங்கள் மற்றும் நிறு­வ­னங்­களின் உத­வி­யுடன் நாம் நிவர்த்தி செய்­துள்ளோம்.

நாட்டின் சட்­ட­திட்­டங்­களை மதித்து அர­சாங்கம் வழங்­கி­யுள்ள அறிவுறுத்­தல்­க­ளின்­படி பாது­காப்புப் படை­யினர், சுகா­தாரப் பிரிவினர், மற்றும் ஓட்­ட­மா­வடி பிரதேச சபை ஊழியர்கள் இந்த மகத்தான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு சிறந்த முறையில் இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நிதி வசூலிப்பு தொடர்பான தகவல்கள் பரவியுள்ளமை அனைவரையும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

எனவே, இவ்வாறான நாசகார செயல்களை யார் செய்தாலும் அவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்ட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment