ரிஷாத் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 24, 2021

ரிஷாத் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்

சிகிச்சை நிறைவடைந்து ரிஷாத் பதியுதீன் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இன்று சனிக்கிழமை சிகிச்சை நிறைவடைந்து மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சுகயீனம் காரணமாக அவர் கடந்த 17 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment