சர்வதேசத்தை இலங்கைக்கு எதிராக திருப்ப எதிர்க்கட்சியினர் முயற்சி - அஜித் நிவாட் கப்ரால் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

சர்வதேசத்தை இலங்கைக்கு எதிராக திருப்ப எதிர்க்கட்சியினர் முயற்சி - அஜித் நிவாட் கப்ரால்

(ஆர்.யசி)

மனித உரிமைகள் குறித்தும், போர்க் குற்றங்கள் என்ற குற்றச்சாட்டிலும் சர்வதேசம் இலங்கையை நெருக்கிக் கொண்டுள்ள நிலையில் பொருளாதார ரீதியாகவும் சர்வதேசத்தை எமக்கு எதிராக திருப்பி, சர்வதேச முதலீடுகளை தடுக்கவும், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி அதன் மூலமாக ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தவுமே எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

சர்வதேச கடன்களை பெற்றுக் கொள்வதா அல்லது தேசிய உற்பத்திகள் மூலமாக பணத்தை பெற்றுக் கொள்வதா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

சர்வதேசத்தை எமக்கு எதிராக திருப்பி, சர்வதேச முதலீடுகளை தடுக்கவும், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி அதன் மூலமாக ஆட்சி மாற்றத்தை செய்யவுமே எதிர்க் கட்சியினர், மங்கள சமரவீர, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் முயற்சிக்கின்றனர்.

ஏற்கனவே மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் போன்ற வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் இலங்கையை நெருக்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்ற நிலையில் பொருளாதார ரீதியிலும் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளுவதே இவர்களின் நோக்கமாகும். அதற்கான செய்தியை இவர்கள் சர்வதேசத்திற்கு வழங்கி வருகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment