கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்த உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “மஜ்மா நகரில்" அமைந்துள்ள கொரோனா மையவாடியில் இன்று புதன்கிழமை (07.07.2021) வரை 934 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “மஜ்மா நகரில்" அமைந்துள்ள கொரோனா மையவாடியில் இன்று புதன்கிழமை வரை 883 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கப்பட்டுள்ளதுடன், 22 இந்து உடல்களும், 14 கிறிஸ்தவ உடல்களும், 13 பௌத்த உடல்களும், 02 வெளிநாட்டவர்களின் உடல்களுமாக மொத்தம் 934 உடல்கள் அடக்கப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்களில் ஒருவர் இந்தியரும் மற்றவர் நைஜீரியாவை சேர்ந்தவருமாவார்.
No comments:
Post a Comment