இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி-20 போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 ஆட்டத்தில் இந்தியா 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்றைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தசூன் சானக்க தலைமையிலான இலங்கை அணியில் அனுபவ வீரர்கள் குறைவு. தொடக்க ஆட்டத்தில் இறுதி 15 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 126 ஓட்டங்களில் சுருண்டது.
சரித் அசலங்க, அவிஷ்கா பெர்னாண்டோ தவிர அந்த அணியில் ஏனைய வீரர்கள் சிறந்த துடுப்பாட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை.
ஏற்கனவே ஒரு நாள் தொடரை பறிகொடுத்துவிட்ட இலங்கை அணி டி-20 ஓவர் தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் தங்களக்கு வழங்கப்பட்ட கடமைகளை சிறப்பாக நிறைவேற்றினால் இந்திய அணியினருக்கு சவால் அளிக்கலாம்.
மறுபக்கம் அனுபவம் உடைய வீரர்களை கொண்டுள்ள இந்தியா, இப் போட்டியிலும் வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் நோக்குடன் இன்று களம் காணும்.
No comments:
Post a Comment