சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மேலும் 16 இலட்சம் (1.6 மில்லியன்) Sinopharm தடுப்பூசி டோஸ்கள் இன்று இலங்கையை வந்தடைந்தன.
இன்று (27) அதிகாலை வந்தடைய வேண்டிய குறித்த தடுப்பூசிகளை ஏற்றிய ஶ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானங்கள், இடி - மின்னலுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக, தாமதமாக வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலை காரணமாக, சீனாவின் பீஜிங் நகரிலிருந்து புறப்பட்ட குறித்த விமானங்கள், சீனாவின் மற்றுமொரு நகரில் தரையிறங்கியதாக, சீன தூதரகம் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 10 இலட்சம் டோஸ்களுடனான விமானம் ஒன்றும், 6 இலட்சம் கொண்ட மற்றுமொரு விமானமும் வெவ்வேறு நேரங்களில் இன்று (27) முற்பகல் இலங்கையை வந்தடைந்திருந்தன.
குறித்த தடுப்பூசிகளை செலுத்தும் அதற்கான 1.6 மில்லியன் சிரிஞ்சர்களும் அதனுடன் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, இதுவரை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மொத்த Sinopharm தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை ஒரு கோடி 7 இலட்சம் (17 மில்லியன்கள்) என்பதுடன், சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட Sinopharm தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 27 இலட்சமாக (2.7 மில்லியன்கள்) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலவசமாக கிடைத்தவை (2.7 மில்லியன்)
மார்ச் 31 - 600,000 (0.6 மில்லியன்)
மே 25 - 500,000 (0.5 மில்லியன்)
ஜூலை 27 - 1,600,000 (1.6 மில்லியன்)
கொள்வனவு செய்யப்பட்டவை (8 மில்லியன்)
ஜூன் 06 - ஒரு மில்லியன்
ஜூன் 09 - ஒரு மில்லியன்
ஜூலை 02 - ஒரு மில்லியன்
ஜூலை 04 - ஒரு மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்
No comments:
Post a Comment