மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (14) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அத்துடன், மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவும், மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சஷி மஹேந்திர மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அண்மையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய, பாராளுமன்ற பேரவையின் அனுமதியைத் தொடர்ந்து, குறித்த பதவிப்பிரமாணம் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவும் பிரசன்னமாகியிருந்தார்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சிசிர.ஜே.டி. ஆப்ரூ ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் ஏற்படும் வெற்றிடத்துக்கு உச்ச நீதிமன்ற நீதியரசர் எல்.ரி.பி. தெஹிதெனியவை நியமிப்பதற்கும் குறித்த பாராளுமன்ற பேரவையில், இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment