தனது மனைவியை சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கடத்தியதாக பொலிஸ் பொறுப்பதிகாரி முறைப்பாடு..! - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

தனது மனைவியை சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கடத்தியதாக பொலிஸ் பொறுப்பதிகாரி முறைப்பாடு..!

(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தனது மனைவியை கடத்திச் சென்றுள்ளதாக கம்பஹா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். 

இது தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி இரவு 9.45 மணியளவில், கொழும்பு கண்டி பிரதான வீதியில் குறித்த சி.ஐ.டி. உதவி பொலிஸ் அத்தியட்சகர் தனது உத்தியோகபூர்வ வாகனத்தில், தனது மனைவியுடன் பயணிப்பதை, குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அவதானித்துள்ளதுடன், அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதன்போது அந்த வாகனம் களனி - தலுகம பகுதி வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் சென்றுள்ளது.

அங்கு பொலிஸ் பொறுப்பதிகாரியும் செல்லவே, இரு தரப்புக்கும் அங்கு வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து, குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும், உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment