இலங்கை கடல் வாழ் உயிரினங்களுக்காக பிரார்த்திக்கின்றேன் - எரிக் சொல்ஹெய்ம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

இலங்கை கடல் வாழ் உயிரினங்களுக்காக பிரார்த்திக்கின்றேன் - எரிக் சொல்ஹெய்ம்

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் கடற்கரைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் இயற்கை குறித்து பிரார்த்தனை செய்கிறேன். பேர்ள் கப்பல் விபத்தினால் உள்நாட்டு கடற்கரைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் பாரதூரத்தன்மை குறித்து அறிய முடிகின்றது என உலக மூல வள நிறுவனத்தின் தலைமை ஆலோசகரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

பேர்ள் கப்பல் விபத்து குறித்து பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கொழும்புத் துறைமுகத்திற்கு வடமேற்குப்பகுதி கடலில் எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற சரக்கு கப்பலில்பாரிய தீ ஏற்பட்டது. சுமார் ஒரு வார காலம் வரை நீடித்த அந்த கப்பலின் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் அதனால் கடல் வளத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை சீர் செய்ய முடியாத நிலையே உள்ளது.

குறிப்பாக இராசாயண பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் மாசுப் பொருட்கள் ஏற்கனவே கடல் நீரில் கலந்து விட்டுள்ளது. இந்த விபத்தின் மோசமான பின்விளைவுகள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் இவ்வாறான இரசாயணங்கள் கடலில் கலப்பது ஆபத்தானதாகும். இலங்கை கடற்கரைக்கு பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட ஆபத்தான நிலைமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இது பாரியதொரு ஆபத்தாகவே காண முடிகிறது.

இலங்கையின் அழகிய கடற்கரைகளுக்கு கப்பலிலிருந்து பிளாஸ்டிக் மாசுபாடு பரவியுள்ளது. இது பாரியதொரு ஆபத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம்.

இலங்கையின் கடற்கரைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் இயற்கை குறித்து பிரார்த்தனை செய்வதாக உலக மூலவள நிறுவனத்தின் தலைமை ஆலோசகரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.

வீரகேசரி 

No comments:

Post a Comment