இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைனையடுத்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,00,28,709 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 1,358 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,90,660 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 68,817 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,89,94,855 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 96.56 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் 6,43,194 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
No comments:
Post a Comment