இரவு நேரங்களில் நடமாடுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை : வாழைச்சேனையில் இரண்டு பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

இரவு நேரங்களில் நடமாடுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை : வாழைச்சேனையில் இரண்டு பேருக்கு கொரோனா

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் தொடர்ந்தேர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் பயணக் கட்டுப்பாட்டை மீறி இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை நடமாடும் வேலைத்திட்டம் தொடர்ந்து கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை பயணக் கட்டுப்பாட்டை மீறி இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடிய முப்பத்தெட்டு (38) நபர்களுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் நடைபெற்ற பரிசோதனை நிகழ்வில்; மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment