பல்லேகல ஆடைத் தொழிற்சாலையில் 74 பணியாளர்களுக்கு திடீர் சுகயீனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

பல்லேகல ஆடைத் தொழிற்சாலையில் 74 பணியாளர்களுக்கு திடீர் சுகயீனம்

கண்டி - பல்லேகல முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் பணியாளர்களில் 74 பேர் திடீரென சுகயீனமடைந்து மயக்கமடைந்துள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது வாந்தி மற்றும் தலைவலி காரணமாகவே குறித்த பணியாளர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள், மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 64 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு மயக்கமடைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. எனினும், தடுப்பூசிக்கும் இவ்வாறு நோய்வாய்ப்பட்டதற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. 

உணவு ஒவ்வாமையால் இவ்வாறாக திடீரென இப்பணியாளர்கள் சுகயீனமடைந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment